ஒரு சர்க்கரை தொழிற்சாலையில் பணியாற்றி சகப்பணியாளர்களின் மதிப்பை பெற்றவராக, விவசாயிகளை ஊக்கப்படுத்துபவராக ஒய்வு பெறும் வரை ஓயாமல் ஓடி உழைத்த மணியேட்டன் உண்மையில் ஒரு கர்ம யோகி.
தன்னால் இயன்றவரை ஏழைகளுக்கு உதவி, சிறுவர் சிறுமிகளுக்கு கல்வி அளித்து வரும் மணியேட்டன் ஒரு சமூக சேவகர் என்றால் அது மிகையாகாது.
சத்குரு யோகாச்ரமம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக நூற்றுக்கணக்கான புண்ணிய ஆத்மாக்களுக்கு இலவசமாக யோகாசனம், பிரணாயாமம் மற்றும் தியான முறைகளை கற்றுக்கொடுத்தும், நாற்பது வருடங்களாக சத்சங்கம் மூலமாக ஞான கருத்துக்களை பொது மக்களுக்கு போதித்தும் வரும் ஒரு சத்குரு தான் மணியேட்டன்.
எல்லா ஜீவராசிகளிலும் இறைவனை கண்டு, தனக்குள்ளும் தானே அறிந்து, தன்னிடம் வந்து சேரும் உயிர்களிடம் கருணையாலும் ஞானத்தாலும் உபதேசித்து உயர்த்துகின்ற மணியேட்டன் உண்மையில் ஒரு ஆத்ம ஞானி!
2 Comments
could have written in english
ReplyDelete*சத்குரு மணி ஏட்டன்* அவர்களின் உண்மை நிலையை விளக்கும் அருமையான அறிமுகம் நன்றிங்க நண்பரே 🙏🙏🙏
ReplyDelete